Thursday, 24 November 2016

pimples treatment in siddha

முகப்பரு - Acne vulgaris



mugapparu8
முகப்பரு ( acne vulgaris ) :

பொதுவாக பதின் வயதில்(Teenage) கிட்டத்தட்ட எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை முகப்பரு. அதிலும் பதின் வயதின் கடைசி வருடங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விட அதிகமாகக் காணப்படும். ஆனால் சில பெண் பிள்ளைகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இலேசாக ஆரம்பித்து சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர் பிரச்சனையாக இருக்கும்.
mugapparu1சில பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் கூட இது ஒரு பிரச்சனையாக தொடர்வதுண்டு.
காட்சி ஊடகங்களில் (தொலைக்காட்சி, சினிமா) பணியாற்றும் பெண்களுக்கு முகப்பரு பெரிய தொல்லையாக இருந்து மன உளைச்சலைத் தரும்.
சிலருக்கு இதனால் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டு அவை மாறாமல் நிலையாக இருந்துவிடுவதும் உண்டு.
mugapparu4

முகப்பரு எங்கெல்லாம் வரலாம்?
இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பொதுவாக முகத்தில் வந்தாலும், தோள்பட்டை, மார்பின் மேல் பகுதி, முதுகு போன்ற இடங்களிலும் இது வருவதுண்டு. சிலருக்கு முதுகில் பிட்டம் (Buttocks) வரைகூட வருவதுண்டு.

முகப்பரு ஏன் வருகிறது?
mugapparu5முகப்பரு ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் தோலின் ஒன்றிரண்டு பகுதிகளை தெரிந்து கொள்வோம். தோல் என்பது உடலின் மிகப் பெரிய ஒரு உறுப்பு. மேலும் தோல் என்பது ஒரு சிக்கலான உறுப்பு. இது பல அடுக்குகளால் ஆனது மற்றும் பல சிறு சிறு உள் பகுதிகளை உடையது.
  • மயிர்க்கோளம் – Hair Follicle
இது தோலின் ஒரு பகுதி. மயிர் உற்பத்தியாகும் பகுதி.
  • சீபம் சுரப்பி – Sebaceous Gland
தோலுக்கும், மயிருக்கும் எண்ணெய் பசையை கொடுக்கும் ஒரு சுரப்பி. இது சுரக்கும் சுரப்பின் பெயர் ‘சீபம்’.
சரி, இனி முகப்பரு ஏன் ஏற்படுகிறது என பார்ப்போம்.

-               ‘சீபம்’ சுரப்பு காரணமா?

சீபம் சுரப்பி அதிகமாக சுரப்பதால் முகப்பரு வரலாம் எனவும் கூறப்படுகிறது. (Increased Sebum Secreting rate) அப்படியானால் ஏன் அதிகமாக சுரக்கிறது?

-               ஹார்மோன்கள் காரணமா?

குறிப்பாக ஆண்களுக்கான Androgenஹார்மோன் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பதின் வயதில் இந்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை துவங்குவதாகவும் கருதப்படுகிறது. அதே சமயம் பெண்களுக்கான ஹார்மோன்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
ஆனால் பலருக்கு சோதனை செய்து பார்த்ததில் ஹார்மோன்களின் அளவு சரியான அளவிலேயே இருந்திருக்கிறது. எனவே இதுவே காரணம் என இறுதியாகக் கூற முடியவில்லை.

மயிர் கோளத்தில் ஏற்படும் வீக்கம் காரணமா?

பல்வேறு காரணங்களால் மயிர்க்கோளத்தில் ஏற்படும் வீக்கம் முகப்பருவிற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. மயிர் துவாரங்கள் அடைபடும்போது முகப்பரு ஏற்படுகிறது.
பதின் வயதில் மயிர்க் கோளங்கள் முதிர்ச்சி அடைவதால் முகப்பரு தோன்றுகிறது(Hair follicle Maturation).

பரம்பரை காரணமா?

பரம்பரையும் ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் இதுவும் தீர்க்கமான முடிவல்ல.

மரபணு காரணமா?

முகப்பருவிற்கு மரபணு காரணமா என்ற ஆய்வகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

கிருமிகள் காரணமா?

Propionibacterium acnes போன்ற தொற்றுகளின் காரணமாகவும் ‘சீபம்’ வெளியேறும் துவாரங்களில் (Pilosebaceous duct) வீக்கம் ஏற்பட்டு முகப்பரு பிரச்சினை அதிகமாகிறது.

வேலை மற்றும் வாழ்க்கை முறை காரணமா?
எண்ணெய் பிசுக்கு முகத்தில் இருக்கும் படியான வேலை செய்வது மற்றும் அது மாதிரியான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருப்பதால் முகப்பரு வரலாம்.
மேலும் முகத்தில் வெயில் படாமலே இருப்பதும் முகப்பரு வருவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

மருந்துகள் காரணமா?
mugapparu8
-               Certicosteroids – ஸ்டீராய்டுகள்
-               AcTH
-               Testosterone (ஹார்மோன் மருந்துகள்)
-               Gonadotropins
-               Contraceptives (கருத்தடை மாத்திரைகள்)
-               Trimethadione (வலிப்பு மருந்து)
-               Iodides
-               Bromides
போன்ற மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவாக முகப்பரு வரலாம்.

White head, Black head என்றால் என்ன?
mugapparu2
முகத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் சிறு சிறு முள் போன்று தோன்றி இருக்கும். இதனை White head, Black head என்கிறோம்.
இவை சீபம் மற்றும் தோலின் Keratinஇரண்டும் கலந்து சீபம் வெளியேறும் துவாரங்களை அடைத்துக் கொள்வதால் உண்டாகின்றன. தோலின் நிறமிகளை Melanin ஆக்சிஜனேற்றம் அடைவதால் இவற்றில் சில கருப்பு நிறத்திலும் மற்றவை வெள்ளை நிறத்திலும் உள்ளன.
சரி இப்படி பல்வேறு காரணங்கள் முகப்பருவிற்கு கூறப்பட்டாலும் இன்னும் முகப்பருவிற்கான சரியான காரணம் முடிவாகக் கூறப்படவில்லை.
The Pathogenesis of Acne is incompletely understood என்கிறது நவீன மருத்துவம்.

சரிஇனி சித்த மருத்துவ விளக்கத்திற்கு வருவோம்
தோல்:
mugapparu5
உடலில் இயங்கும் மூன்று இயக்கங்களான வாதம், பித்தம், கபம் என்பதில் தோல் என்பது வாதம் செயல்படும் உறுப்பு. தோல் மற்றும் நரம்புகள் வாதம் இயங்கும் உறுப்புகளாக உள்ளன.
கரு உற்பத்தி ஆகும் போது மூன்று அடுக்குகளாக உற்பத்தியாகிறது. Endoderm, Mesoderm, Ectoderm
இதில் தோல் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை Ectoderm எனும் ஒரே அடுக்கிலிருந்து உருவாகின்றன.
எனவே நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தோல் முழுவதும் பிரதிபலிக்கும். எல்லா தோல் நோய்களோடும் மனதுக்கு மிகுந்த தொடர்பு உண்டு. எல்லா தோல் நோய்களிலும் மன பிரச்சனைகள் ஒரு காரணியாக இருக்கும்.
ஆக வாதத்தின் செயல்பாட்டில் ஏற்படும் சீர்கேடே தோல்நோய்களுக்குக் காரணம்.
முகப்பருவிற்கு காரணமும் அதுவே. எனவே முகப்பருவின் மர்மம் வாதத்தின் செயல்பாட்டில்தான் உள்ளது.

முகப்பரு சிகிச்சை:

வாதத்தை சமன் செய்வதற்காக முதலில் பேதிக்கு மருந்து கொடுத்து சிகிச்சையை துவங்க வேண்டும்.
பேதி செய்வித்தல் (Purgation) என்பது அனைவரும் நான்கு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது அவசியம். இது உடலின் எல்லா விதமான சுரப்பிகளின் செயல்பாட்டையும் சரிசெய்யும்.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் இல்லாமல் உடலை வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் உணவு மற்றும் பழக்க வழங்கங்களே காரணமாக அமைகிறது.
மலச்சிக்கலை சரிசெய்வதற்கு அநேக நல்ல சித்த மருந்துகள் உள்ளன என்றாலும் அவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையடன் சாப்பிடுவதே நல்லது.
-அகத்திக்கீரை(அடிக்கடி சாப்பிடக்கூடாது)
-அத்தி
- பச்சைக் காய்கறிகள்
- நெல்லிக்காய்
- கீரைகள் (மதியம் அவசியம்)
- பழங்கள்
- அன்னாசிப்பழம்
- பேரீச்சை
- சுரைக்காய்
- சோம்பு
- பீர்க்கங்காய்
- மக்காச்சோளம்
போன்றவை அதிகம் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கும்.
நிறைய நீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.


உள் மருந்து:
நோயின் தன்மை, நோயாளியின் தேக நிலை ஆகியவற்றை கணித்து முறையான சித்த உள் மருந்துகள் எடுத்துக் கொண்டால் முகப்பருவை சரிசெய்யலாம்.

வெளிப்பூச்சு:
அநேக பூச்சுகளை (Creams) போடுவது கூட முகப்பருவை அதிகரிக்கும்.
எண்ணெய்த் தன்மையை போக்கக்கூடியவதும் தோலில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கக் கூடியதுமான சித்த மருத்துவ மருந்துகள் உள்ளன.
அவற்றை காலையிலும் மாலையிலும் முகத்தில் பூசி, சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வருவதால் முகப்பரு மறையும்.

முகத்தில் வெயில்:
முகத்தில் வெயில் படாமலே இருக்கக்கூடாது. சிறிது நேரமாவது முகத்தில் வெயில் படுவது அவசியம். அதே போல முகத்தில் வியப்பதும் அவசியம்.

உடற்பயிற்சி:
சோம்பலான மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை இருந்தால் உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம்.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

psoriasis in siddha

சொரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை ( Psoriasis )

Dr.Jerome

தோல் நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய் வெண்பருச்செதில் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
வெள்ளைக்காரர்களிடம் 2% காணப்படும். இந்நோய் ஆப்பிரிக்கர்களிடமும், ஆசியர்களிடமும் அதைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.

நோயின் தன்மை:

Psoriasis6

தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும்.

இந்தப் படைகளின் உருவமும், அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். இது உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம். பெரும்பாலும் தலை மற்றும் உடலில் தோன்றும், சிலருக்கு நகங்களை பாதித்து நகத்தில் பள்ளங்களும், குத்தியது போன்ற குழிகளும் தோன்றும்.

சிலருக்கு இந்நோய், மூட்டுகளையும் பாதித்து மூட்டுவலியை உண்டாக்கும் (Psorisatic Arthritis).

இந்நோய் ஏன் ஏற்படுகிறது?

பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் பரம்பரை காரணி உள்ளது. தாய் அல்லது தந்தையில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் அவர்களின் வாரிசுக்கு இந்நோய் வருவதற்கு 25% வாய்ப்புள்ளது. இருவருக்கும் இந்நோய் இருந்தால் வாரிசுக்கு 50% வாய்ப்புள்ளது.

Psoriasis5

தோலில் பல அடுக்குகள் உள்ளன. கீழே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் (Keratinocyte) முதிர்ந்து, அடுத்த அடுக்காக மாறும். இவ்வாறு இறுதியில் மேலே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் துகள்காக உதிர்ந்து விடும். இந்த நிகழ்வுகள் இயற்கையாக தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

இந்த மொத்த நிகழ்வும் ஒருமுறை நடைபெறுவதற்கு 28 நாட்கள் ஆகும். அதாவது கீழ் அடுக்கில் உள்ள செல்கள் முதிர்ந்து கடைசி அடுக்கிற்குச் சென்று உதிர்வதற்கு 28 நாட்கள் ஆகும். ஆனால் சொரியாசிஸ் நோயில் இவை 5 நாட்களில் நடந்து விடுகிறது. எனவே முறையாக முதிர்ச்சி அடையாமல் தோல் செல்கள் உதிர ஆரம்பிக்கின்றன. இவர்களுக்கு நகங்களும் இதேபோல முதிர்ச்சி அடையாமல், வேகமாக வளர்வதால் நகங்களும் குழிகள் விழுந்து காணப்படும்.

சோரியாசிஸை அதிகப்படுத்தும் காரணிகள்:
  • காயங்கள்
  • சில தொற்றுக் கிருமிகள்
  • சிலருக்கு வெயில்
  • சில மருந்துகள்
  • மன அழுத்தம்
எந்த வயதினருக்கு இந்நோய் ஏற்படுகிறது:
  • எல்லா வயதினருக்கும் வரலாம். ஆனால் பொதுவாக 5 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு வருவதில்லை.
  • பொதுவாக பதின்வயது மற்றும் வாலிப வயதில் ஆரம்பிக்கும்.
  • அதற்கடுத்து 50 மற்றும் 60களில் ஆரம்பிக்கலாம்.
  • எவ்வளவு குறைந்த வயதில் ஆரம்பிக்கிறதோ, அவ்வளவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மருத்துவம்:

சித்த மருத்துவத்தில் சிறப்பாக குணப்படுத்தக்கூடிய நோய்களில் இந்த நோயும் ஒன்று. பொதுவாகவே தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
மனதை சாந்தப்படுத்தக்கூடியதும், தோல் செயல்பாட்டை சரிசெய்யக்கூடியதுமான உள் மருந்துகளுடன், புற மருந்துகளும் தொடர்ந்து முறையாக எடுப்பதன் மூலம் இந்நோயை முற்றிலும் சரி செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
  • அசைவம்
  • கம்பு
  • தினை
  • வரகு
  • சாமை
  • கிழங்கு வகைகள்
  • கொய்யா
  • முட்டை
  • மீன்கள்
  • கருவாடு
  • கத்தரிக்காய்
  • மாங்காய்

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் நோயினை அதிகரிக்கலாம். அதை அறிந்து தவிர்ப்பது நல்லது.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

vitiligo treatment in siddha


வெண்புள்ளி நோய்



மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293






skin diseases in general

தோல் நோய்கள்





tholnoi fi


மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர்.

இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ. அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல்.
siddhamaruththuvam3


அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் தோல்நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக,அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.

கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி,‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில் விளக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக் கூறவில்லை.

தோல்,கல்லீரல் போன்ற சிக்கலான அமைப்புகளையுடைய உறுப்புகளில் அந்தப் பகுதி சார்ந்த மருத்துவம் பலன் தராது (Localised). மாறாக முழுமையான ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது (Holistic). இந்தமுழுமையான அணுகுமுறைதான் சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் பயன்படுகிறது. எனவேதான் தோல்நோய்களில் சித்த மருத்துவமே நிரந்தரத் தீர்வைத் தருகிறது.

ஏன் இவைகளுக்கெல்லாம் இன்றும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், எல்லாவற்றையுமே நுண்ணோக்கி மூலம் பார்த்து அல்லது ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்து விடை தேடுவது நவீன மருத்துவத்தின் இயல்பு. ஆனால் கண்ணுக்குத் தெரியாத உடல் இயக்கங்களான 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளே தோல் நோய்களுக்குக் காரணம் என சித்த மருத்துவம் விளக்குகிறது.

நரம்புகள் என்பவைகளில்தான் வாதம் எனும் வாயுக்களின் செயல்பாடு உள்ளது. மனதும் வாயுக்களின் செயல்பாடு உள்ள பகுதிதான் (பிராணன் எனும் வாயுவின் இயக்கமே மனதின் இயக்கம்). மனதில் ஏற்படும் பிரச்சனைகளும் தோல் நோய்களைத் தூண்டிவிடும்.

தோல் நோய்களுக்கான சிகிச்சையின் அடிப்படை:

சித்தமருத்துவத்தில் அரிப்புக்கு ஒரு மருந்து, தடிப்புக்கு ஒரு மருந்து என தனித்தனியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. தோல் நோய்கள் உடலின் சாரம் (திரவப்பகுதி), இரத்தம், தசை ஆகிய மூன்றையும் பாதிப்பதால் இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய மருந்துகளையும், உடல் தாதுக்களை வலிமைப்படுத்தக் கூடிய மருந்துகளையும் அடிப்படையாகக் கொண்டும், மேலும் அந்த குறிப்பிட்ட நோய் எதனால் உண்டாகிறது என்ற அடிப்படையிலும் மருத்துவம் செய்யப்படுகிறது.
மேலும் சிறு பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கடியினாலும் மற்றும் கிருமிகளாலும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன என சித்த மருத்துவத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தோல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளன?
  1. முகப்பரு
  2. வெண்குட்டம் – Leucoderma
  3. சொரியாசிஸ் – (காளாஞ்சகப்படை) (psoriasis)
  4. கரப்பான் – (Eczema)
  5. தேமல் – (Tinea)
  6. பொடுகு – (Dandruf)
  7. சேற்றுப்புண்
  8. பித்த வெடிப்பு
  9. படுக்கை புண் – (Bed Sore)
  10. தடிப்பு
  11. அரிப்பு
  12. தோல் வறட்சி
  13. வேர்க்குரு
  14. வாய்ப்புண்
  15. கால் ஆணி

1. வெண் குட்டம் (வெண் புள்ளி நோய்):


thol noi5
இது தொற்று நோய் அல்ல. ஒருவருக்கு இந்த நோய் குணமாகுமா,குணமாகாதா என்பதை சித்த மருத்துவ முறையில் கணிக்க முடியும்.
குணமாகும் என கணிக்கப்பட்டவர்கள் முறையாக மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம்இந்நோயிலிருந்து முற்றிலும் விடுதலைப் பெறலாம். முழுமையாக குணமாகாது என கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்தை எடுத்துக் கொள்வதால் இந்நோய் மேற்கொண்டு உடலில் பாராமல் தடுக்க முடியும்.
உடலில் தோலின் வெள்ளை நிற புள்ளிகளையும் படைகளையும் ஏற்படுத்தும் நோய். இது தோல் நிறமிகளில் ஏற்படும் குறைபாடே.


2. காளாஞ்சகப்படை(psoriasis):

siddhamaruththuvam2
சொரியாசிஸ் என அழைக்கப்படும் இந்நோய் பல்வேறு காரணங்களால் வருகிறது. இதில் செந்நிற பருக்களும், தடிப்புகளும் உண்டாகும். இவை வெண்மை நிற பளபளப்பான செதில்கள் மூடப்பட்டிருக்கும். சொறிந்தால் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
உடலில் படைகள் ஏற்படும் இடங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். சிலருக்கு நகங்களை பாதிக்கும். நகத்தில் சிறு குழிகள் உண்டாகும். இந்நோயினால் மூட்டு வலியும் ஏற்படலாம் (Psoriatic Arthritis).
சிகிச்சை:
முறையாக சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணமடையலாம்.

3 முகப்பரு:

thol noi4

குறிப்பாக வாலிப வயதில் உள்ள சிலருக்கு இது பெரிய பிரச்சனையாக இருக்கும்.

தீர்வு:

1. உணவு முறை (Food change)
2. உள் மருந்து
3. வெளி மருந்து (External Application)
இவற்றால் முகப்பருவிலிருந்து விடுதலை அடைய முடியும். இவற்றை பின்பற்றுவதால் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.


4. கரப்பான் (Eczema)

http://www.lib.uiowa.edu/hardin/md/dermnet/eczema24.html


தோலில் சொரசொரப்பான படைகள் தோன்றி, அந்த இடத்தில் வீக்கம் அல்லது சிறு சிறு குருக்கள் உண்டாகும். சிலருக்கு சிறு கீறல்கள் உண்டாகி நீர் கசியும், அரிப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, தவளையின் தோல் போல இருக்கும்.
வரும் காரணம்:
வெளியிலிருந்து ஏற்படும் உராய்வு அல்லது உள்ளுக்குள்ளே சாப்பிடும் உணவு ஆகிய ஏதோ ஒரு காரணத்தால் இந்நோய் வருகிறது.
கரப்பானை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை கரப்பான் பொருட்கள் என சித்த மருத்துவம் வகைப்படுத்துகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். சில மாமிசங்கள், கம்பு, திணை, வரகு, சாமை, மீன், கருவாடு, கத்திரிக்காய், முட்டை போன்றவை கரப்பான் பொருட்கள்.
மருத்துவம்:
இதில் பல வகைகள் இருப்பதால் அந்த வகைக்கேற்ற முறையான உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.


5. தேமல்:

OLYMPUS DIGITAL CAMERA

தோலில் நிறமாற்றம் மற்றும் அரிப்பு ஆகிய குறிகுணங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் உடனடியாக நோய் கணிப்பு (Diagnosis) செய்வது அவசியம். ஏனென்றால் பல்வேறு தோல்நோய்கள் முதலில் தேமல் போல ஆரம்பிக்கலாம்.
மருத்துவம்:
உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.


6. பொடுகு:

thol noi8
ஒருவகை பூஞ்சைக் காளானால் தலையில் ஏற்படும் நோய். தலையில் அரிப்பு,சொறிந்தால் பொடி போல உதிரும்.
மருத்துவம்:
முறையான உள் மற்றும் வெளி சித்த மருந்துகளால் முற்றிலும் குணமாக்க முடியும். மீண்டும் வராமல் தடுப்பதற்கு தலையணை உறைகள்,தலை உலர்த்தும் துணிகள் போன்றவற்றை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும்.


7. சேற்றுப்புண்:

ஈரமான தரையில் நடந்துகொண்டு நின்றுகொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கால் விரல் இடுக்குகளில் புண் ஏற்படும். கால் விரல்கள் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இவை ஏற்பட்டால் எளிதில் குணமாகாமல் பிரச்சனை ஏற்படுத்தும்.

மருத்துவம்:
உள் மருந்துகள் மற்றும் தொடர்ச்சியான வெளி மருந்துகள் மற்றும் ஈரத்தரையை தவிர்த்து கால்களை உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் குணப்படுத்த முடியும்.


8. பித்த வெடிப்பு:
thol noi3
பாதங்களின் அடிப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். முக்கியமாக குதிங்காலில் ஏற்படும். இது ஒரு அழகுப் பிரச்சனையாக பலருக்கு ஆகிவிடுகிறது.
ஆனாலும் சிலருக்கு காலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு வலி கொடுக்கும்.
மருத்துவம்:
சித்த மருத்துவத்தில் இதனை மிகச் சுலபமாக குணமாக்கலாம்.

9. படுக்கைப்புண்:
thol noi9தொடர்ந்து படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுவாக முதுகு மற்றும் உடலின் பின் பாகத்தில் ஏற்படும் புண்கள் இவை.
முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

மருத்துவம்:
சுகாதாரமான முறையில் படுக்கையை பராமரிப்பதாலும் சில புற மருந்துகளை உடலில் தடவி படுக்க வைப்பதாலும் இதனை தவிர்க்கலாம் மற்றும் குணமாக்கலாம்.
தோல் நோய்களைப் பொறுத்தவரையில் காலம் தாழ்த்தாமல் ஆரம்பத்திலேயே சித்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால் தோல் நோய்களிலிருந்து முழுமையாக விடுதலைப் பெற முடியும்.

உணவு:
பொதுவாக தோல் நோயாளிகள் மீன், கருவாடு, கத்திரிக்காய், மாங்காய், அதிக புளிப்புள்ள உணவுகள், அதிக காரமுள்ள உணவுகள், கரப்பான் பொருட்கள், தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
மருத்துவ குளியல் பொடிகளை பயன்படுத்தி குளித்து வருவதால் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கமுடியும். இவற்றை சித்தமருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வது நல்லது.

மனது:

மனம் அமைதியாய் இருப்பது தோல் நோய்களுக்கு அவசியம்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293